Posts

வானவில் வண்ணத்தில் காட்சியளிக்கும் கொதிக்கும் நீருற்று..!

Image
  வானவில் வண்ணத்தில் காட்சியளிக்கும் கொதிக்கும் நீருற்று..! 🌈 இந்த உலகில் நம் கண்களுக்கு அழகாக காட்சியளிக்கும் அதிசயங்கள் நமக்கு ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கும். ஆனால் அவை எப்படி உருவாகிறது என்பது நமக்கு தெரிவதில்லை. அந்த அழகாக இருக்கும் அதிசயங்களும் ஆபத்தை ஏற்படுத்தும். 🌈 மழைக்காலங்களில் வானில் தோன்றும் வானவில்லைப் பார்த்து நாம் ரசித்தது உண்டு. அதன் வண்ணத்தைப் பார்க்கும்போது நம் கண்களை கவர்ந்திழுக்கும். 🌈 நீருற்றுகள் பொதுவாக குளிர்ச்சியாகவும், அதிலுள்ள தண்ணீர்கள் நீலநிறத்தில்தான் காட்சியளிக்கும் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான். 🌈 ஆனால் இந்த நீருற்றில் உள்ள தண்ணீர் கொதிக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மைதான். இந்த அதிசயமான நீருற்றில் வானவில் நிறத்தில் தண்ணீர் காட்சியளிப்பதை பற்றி இன்று நாம் தெரிந்து கொள்ளப்போகிறோம். எங்கே அமைந்துள்ளது? 🌈 இந்த மிகப்பெரிய வெப்ப நீருற்று அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் (Yellowstone National Park) கிராண்ட் பிரிஸ்மாடிக் (Grand Prismatic) என்ற இடத்தில் அமைந்துள்ளது. 🌈 இந்த நீருற்றை கொதிக்கும் வெப்ப நீருற்ற

மனிதனை அச்சத்தில் உறைய வைத்த... க்ரூய்நார்ட் தீவு..!

Image
மனிதனை அச்சத்தில் உறைய வைத்த... க்ரூய்நார்ட் தீவு..! 😮 நாம் வாழும் இந்த பூமியில் அதிகமான அதிசயங்களும், மர்மங்களும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அமைந்து இருக்கிறது என்றால் மிகையாகாது. 😮 இந்த வியக்கத்தக்க இடங்களை எல்லாம் நேரில் சென்று பார்த்தால் உண்மையில் இப்படி இருக்கிறதா என்று நமக்குள் ஒரு புரியாத புதிர் உண்டாகும். 😮 அந்த வகையில் மனிதர்கள் இந்த தீவிற்கு செல்வதற்கு பயப்படுகிறார்கள். என்ன காரணமாக இருக்கும்? வாருங்கள் அந்த தீவில் உள்ள மர்மங்களைப் பற்றி பார்க்கலாம். க்ரூய்நார்ட் தீவு : 😮 மனிதர்களை அச்சத்தில் உறைய வைக்கும் இந்த தீவு ஸ்காட்லாந்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 😮 க்ரூய்நார்ட் தீவு ஓவல் வடிவத்தில் அமைந்திருக்கும். இங்கு செல்வதற்கு அனுமதி இருக்கும் நிலையிலும் மனிதர்கள் யாரும் செல்வதில்லை. 😮 அச்சுறுத்தலாக இருப்பதால் இந்த தீவிற்கு மனிதர்கள் செல்வதற்கு தைரியம் இல்லை என்பதுதான் உண்மை. 😮 இந்த தீவு உலகப்போரின் போது, ராணுவ ஆராய்ச்சியாளர்கள் ரசாயன ஆயுதங்களை பரிசோதனை செய்து வந்த இடமாக கூறப்படுகிறது. 😮 க்ரூய்நார்ட் தீவில் வீரியம் மிக்க ஆந்தராக்ஸ் பரிசோதனை செய்த

நமீபியாவின் மர்மமான ஃபெயரி வட்டங்கள்..!

Image
நமீபியாவின் மர்மமான ஃபெயரி வட்டங்கள்..! 👉 உலகில் பல அதிசயங்களும் மர்மங்களும் ஒன்றுக்கொன்று மிஞ்சும் அளவில் நடந்துக் கொண்டேதான் இருக்கிறது. அவற்றில் பல மாறுபட்ட நிகழ்வுகளும் நடந்துக் கொண்டேதான் உள்ளது. 👉 இந்த பூமியில் நடக்கும் சில இயற்கையான அதிசயங்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், நம்மை அச்சப்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றன. 👉 அவ்வாறு அதிசயங்கள் நிறைந்த, நம்மை வியக்க வைக்கும் விடை தெரியாத நமீபியாவின் மர்மமான வட்டங்களைப் பற்றி இன்று பார்க்கலாம். எங்கு அமைந்துள்ளது? 👉 ஆப்பிரிக்காவில் நமீபியா என்ற இடத்தில் வறண்ட பாலைவனங்களில் இந்த மர்மமான வட்டம் அமைந்துள்ளது.  👉 இவை நமீபியாவில் இருக்கும் ஒரு சுவராஸ்யமான புதர்நிலம் ஆகும். வறண்ட புட்கள் கொண்ட இந்த நிலப்பரப்பில் ஆயிரக்கணக்கான வட்டங்கள் தானே உருவாகியுள்ளது. 👉 இந்த மர்மமான வட்டங்களை ஃபெயரி சர்க்கிள் (Fairy circle)என்று அழைக்கிறார்கள். 👉 ஃபெயரி வட்டங்கள் விரிந்த தரையில் கனகச்சிதமாக உருவாகின்றன. இந்த வட்டத்தின் உட்புறத்தில் எந்த தாவரமும் முளைப்பதில்லை. மேலும் ஃபெயரி வட்டங்களின் உள்ளே இருக்கும் மணலுக்கும், வெளியே உள்ள மணலுக்கும் எந்த

மொராக்கி கற்பாறைகள்...!

Image
விசித்திரமான.. மொராக்கி கற்பாறைகள்...! 👉 இந்த பூமியில் பல மர்மங்களும், இயற்கை அதிசயங்களும் நம்மை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. 👉 அது போல கடற்கரையில் எண்ணற்ற வியக்கத்தக்க அதிசயங்கள் ஒளிந்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. 👉 கடல் என்றாலே நம் மனதை பறிகொடுத்து விடுவோம். நீல நிறத்தில் காட்சியளிக்கும் நீர், மற்றும் மணல்கள், பாறைகளைப் பார்த்து நாம் ரசித்தது உண்டு. 👉 ஆனால் இந்த கடற்கரையில் உள்ள பாறைகள் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்... உண்மைதான் வாருங்கள் அதைப்பற்றி பார்க்கலாம். எங்கு அமைந்துள்ளது? 👉 இந்த கற்பாறைகள் நியூஷிலாந்தின் ஒடாகோ அருங்காட்சியகம் (otago museum) பகுதியில் உள்ள koekohe கடற்கரையில் அமைந்துள்ளன. இவை கண்கவர் இயற்கை அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. 👉 கடற்கரையில் அமைந்திருக்கும் கற்கள் அனைத்தும் மிகவும் வித்தியாசமான உருண்டை வடிவத்தில் அமைந்துள்ளது. மேலும் சில கற்கள் முட்டை வடிவத்தில் இருக்கிறது. 👉 இந்த உருண்டை வடிவான கற்பாறைகள் ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 2 மீட்டர் அளவில் 7 டன் எடை வரை இர

பாலைவன ஏரி !!

Image
  அதிசய வைக்கும்... பாலைவன ஏரி !! 🏜 நாம் வாழும் இந்த அழகான பூமியில் பலபல அதிசயங்கள் நாம் எள்ளளவும் நம்ப முடியாத வகையில் ஏற்பட்டு நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. 🏜 பாலைவனம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது வெயிலும், மணலும்தான். மேலும் நீர் கிடைக்கவே அரிதான இடமாகவும் இது காணப்படுகிறது. 🏜 மேலும் சாதாரணமாக உள்ள ஏரியில் திடீரென்று ஒரு ஏரி உருவானால் எவ்வளவு ஆச்சரியம் மற்றும் எண்ணற்ற கேள்விகளும் நமக்கு எழுகிறதல்லவா? 🏜 ஆம்... உண்மைதான்... மணலும், வெயிலும் நிறைந்த ஒரு பாலைவனத்தில் திடீரென உருவான ஒரு ஏரியைப் பற்றிதான் இன்று தெரிந்துகொள்ளப் போகிறோம். 🏜 துனிசிய (Tunisia) நாட்டில் அமைந்துள்ள பாலைவனத்தில் இந்த மர்மமான (Mysterious Lake) ஏரி அமைந்துள்ளது. மேலும் இந்த ஏரியை Lac de Gafsa எனவும் அழைக்கின்றனர். 🏜 இந்த ஏரி பாலைவனத்தில் திடீரென தோன்றியதாகும். இந்த ஏரி தோன்றுவதற்கு முன்னால் அந்த இடமானது பாலைவன மணல்களால் சூழ்ந்துள்ளது. 🏜 எப்படி? எதனால்? இந்த இடத்தில் ஏரி தோன்றியது என யாருக்கும் தெரியவில்லை என கூறப்படுகிறது. 🏜 பாலைவன மணல்களுக்கு இடையில் தோன்றிய ஏரி அனைவரையும் அதிசயிக்க வைக்கும் வகையில் அமை

நரக நுழைவுவாயில்..!

Image
  மனிதர்களை அச்சமூட்டும்.. நரக நுழைவுவாயில்..! 🔥 இந்த உலகமே பல அற்புதங்களால் உருவானது என்று கூட சொல்லலாம். நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு மர்மங்களும், அதிசயங்களும் பூமியில் அதிக அளவில் இருக்கின்றன. 🔥 இதுபோன்ற பல இயற்கை அதிசயங்கள் எவ்வாறு உருவானது என்று கண்டுபிடிக்கும் ஆர்வம் மற்றும் தேடல் நம்மிடம் அதிகமாகவே உள்ளதல்லவா? 🔥 நாம் இந்த உலகில் வாழ்ந்து கொண்டு இருக்கும்போது பிறப்புக்கு முன்னாடியும், இறப்புக்கு முன்னாடியும் நடக்கும் விஷயங்களை தெரிந்துக் கொள்வது பற்றித்தான் ஆர்வமாக இருப்போம். 🔥 ஒரு இடத்தில் நெருப்பை பற்ற வைத்தால், சில மணி நேரம் கழித்து அந்த நெருப்பு அணைந்துவிடும். ஆனால் மழை பெய்தால் கூட இந்த இடத்தில் எரியும் நெருப்பு அணைவதில்லை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம். உண்மைதான் அத்தகைய உலகில் நம்பமுடியாத அற்புதக் காட்சிகளைப் பற்றி இன்று பார்ப்போம். எங்கு அமைந்துள்ளது? 🔥 மத்திய ஆசியாவில் உள்ள துருக்மெனிஸ்தானின் காராகும் பாலைவனத்தில் தர்வாசா என்ற கிராமப்பகுதியில் நரகத்தின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் இந்த எரிவாயு பள்ளம் அமைந்துள்ளது. இவற்றை நரகத்தின்

தேரிக்காடு

Image
  போனால் திரும்பி வர முடியாத மர்மமான - தேரிக்காடு..! 🏜 இந்த உலகத்தில் பல இயற்கை அதிசயங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதில் சில நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. அந்த வகையில் பாலைவனங்களில் எண்ணற்ற மர்மங்களும், அதிசயங்களும் இருக்கிறது. 🏜 பொதுவாக பாலைவனம் என்றால் மணல்கள் நிறைந்து காணப்படும் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான். ஆனால் தமிழ்நாட்டில் பாலைவனம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மைதான் வாருங்கள் அதைப்பற்றி பார்க்கலாம். எங்கு அமைந்துள்ளது? 🏜 திருநெல்வேலி மாவட்டம் தேரிக்காடு என்னும் பகுதியில்தான் இந்த மர்மமான பாலைவனம் அமைந்துள்ளது. 🏜 இவை மற்ற பாலைவனங்கள் போல் சாதாரண நிலப்பரப்பை கொண்டது இல்லை. இங்கு இருக்கும் நிலபரப்பை 'தேரி நிலப்பரப்பு" என்று அழைப்பார்கள். அதனால்தான் இவற்றிற்கு தேரிக்காடு என்று பெயர் வந்தது என்று கூறுகிறார்கள். 🏜 இந்த இடத்தை அகழ்வாராய்ச்சியுடன் தொடர்புடைய அதிசய பூமிகளில் ஒன்றாக கருதுகின்றனர். இந்தியாவில் எங்குமே காணமுடியாத விசித்திர பூமியாகவும் இந்த தேரிக்காடு அமைந்துள்ளது. 🏜 இங்கு இருக்கும் மணல்கள் சிவந்த நிறத்தில் கண்ணுக்கு எட்டிய

இறப்பு ஏரி..!

Image
  மனிதர்களை கரைத்து விடும்... இறப்பு ஏரி..! 👉 இந்த பூமியில் அதிசயம், ஆச்சரியம், அழகுகள் என்று ஏராளமான இயற்கை காட்சிகள் அமைந்துள்ளன. ஆனால், அவை உருவான விஷயங்களைக் கேட்டால்தான் நமக்கு கொஞ்சம் அச்சுறுத்தும் விதத்தில் இருக்கும். 👉 நம் உலகம் ஆச்சரியமாகவும், அழகாகவும் அமைந்திருக்கிறது என்று சொல்லலாம். 👉 ஒரு சில இயற்கை நிகழ்வுகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம் என்றே கூறலாம். 👉 ஏரி என்று சொன்னாலே ஓய்வெடுக்க அழகான இடம், ஆனந்தமாக எல்லோருடன் சேர்ந்து குளித்து மகிழ்வது, மீன் பிடிப்பது போன்றவைத்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் சில ஏரிகள் திகில் நிறைந்த ஏரிகளாகவும் உள்ளன. 👉 அந்த வகையில் மனிதர்களை அச்சத்தில் நடுங்க வைக்கும் இறப்பு ஏரியைப் பற்றி பார்க்கலாம். எங்கு அமைந்துள்ளது? 👉 இத்தாலியில் சிசிலி தீவில்தான் இந்த மர்மான மனிதர்களை பயமுறுத்தும் இறப்பு ஏரி அமைந்துள்ளது. 👉 மிகவும் ஆபத்தான எரிகளில் ஒன்றாக இந்த ஏரி கருதப்படுகிறது. இந்த ஏரியில் ஏதாவது உயிரினங்கள் தவிர்க்க முடியாத நிலையில் விழுந்துவிட்டால் அவை அழிந்துவிடும். 👉 இந்த ஏரியில் எந்த உயிரினங்களும் இல்லை

நீலநிற ஏரிக் குகை..!

Image
  நீலநிற ஏரிக் குகை..!  🌟 குகைகள் பொதுவாக நாம் செல்வதற்கு அச்சுறுத்தும் விதத்தில்தான் இருக்கும். ஆனால் அவற்றில் சில அதிசயமான நிகழ்வுகள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. 🌟 ஆனால் சில குகைகள் பார்ப்பதற்கு அழகாக காட்சியளிக்கும் விதத்தில் அமைந்து இருக்கும். அவற்றை நேரில் சென்று பார்த்தால் நம்மை வியப்பில் ஆழ்த்தும். 🌟 அந்த வகையில் நாம் இன்று ஒரு அதிசயமான, பார்ப்பதற்கு அழகான தோற்றத்தை அளிக்கும் குகையைப் பற்றி பார்க்கலாம். 🌟 இந்த அற்புதமான குகை பிரேசில் நாட்டில் அமைந்துள்ளது. 🌟 தேசிய வரலாற்று மற்றும் கலை பாரம்பரிய நிறுவனத்தால் இயற்கையின் நினைவுச் சின்னமாக இந்தக் குகையைக் பட்டியலிட்டனர். 🌟 நம்முடைய கண்களால் இந்த ஏரி குகையைப் பார்க்கும்போது பிரம்மிப்பில் ஆழ்த்தும். இயற்கையின் அழகையே மிஞ்சும் அளவில் அமைந்துள்ள இடமாக இது திகழ்கிறது. 🌟 இதன் அதிசயம் என்னவென்று சொன்னால் மற்ற ஏரிக் குகையில் இருக்கும் நீர் வெள்ளை நிறத்தில்தான் காட்சியளிக்கும். ஆனால் இந்த குகைகளில் உள்ள ஏரியின் நீர் நிலநிறத்தில் காட்சி அளிக்கும். 🌟 அதற்கு காரணம் ஏரி சூரிய ஒளியால் ஒளிரச் செய்கிறது. ஒரு குறிப்பிட்ட மாதங்களில் மட்டு

Do You know

Image
  Do you know? 1.  The average user of computer blinks their eyes 7 times per minute. 2.  The national tree of Bangladesh is mango tree. 3.  Zero is the only number that cant be represented in Roman numerals. 4.  In Arabic language, the word Banana represents the finger. 5.  If we hear songs in headphone for one hour continuously, it will increase the bacteria 700 times in ear. 6. During the first world war, the bomb blasting sound in France heared upto London. 7. Eating Banana will increase the immunity power. 8. The world tallest tree is hyperion. 9.The first successful electric car was built in the year 1891. 10. Monkeys communicate through a variety of sound vocalizations, body movements and facial expressions. உங்களுக்குத் தெரியுமா? 1. கணினியை பயன்படுத்துபவர்கள் சராசரியாக 1 நிமிடத்திற்கு 7 முறை கண்களை சிமிட்டுகிறார்கள்.  2. வங்காள நாட்டின் தேசிய மரம் மா மரமாகும். 3. ரோமன் எண்களில் குறிப்பிட முடியாத ஒரே எண் பூஜியமாகும். 4. வாழை என்ற வார்த்தை அரபு மொழியில் விரல்களைக் குறிக்கும். 5.