வண்ணமயமாக காட்சியளிக்கும்..... புள்ளி ஏரி..!
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhPzVDmNCs-Jv4WsGwOwqSPjf7j7alYEzuUpnZXt7ZlLIJYm55V7yy8lcaWC2UbZhHSd4YpkJI1uaKTCy2G1AgkY9mwI-sMGdQIhV1eMCAgAGJ131b3HbTXHSOJztYKccoMD0PrwKCQQoc/s0/367f20b474d9c04551c39d3c1c02dc43.jpg)
வண்ணமயமாக காட்சியளிக்கும்..... புள்ளி ஏரி..! 😮 இந்த பூமியில் பல அதிசயங்களும், மர்மங்களும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. அவற்றில் சில நமக்கு வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கின்றன. 😮 ஏரி என்பது நிலத்தால் சூழப்பட்ட ஒரு நீர்நிலை ஆகும். ஏரிகளை பொதுவாக நாம் கிராமப் பகுதிகளில் அதிக இடங்களில் காணலாம். நம்முடைய தண்ணீர் பயன்பாட்டிற்கு அதிகமாக ஏரி பயன்படுகிறது. 😮 ஏரியின் அமைப்புகள் பொதுவாக பல வடிவத்தில் இருக்கும். அந்த பகுதி முழுவதும் நீரால் சூழப்பட்டு இருக்கும் என்பது நமக்கு தெரியும். ஆனால், ஒரு அதிசயம் என்னவென்றால் இந்த ஏரி புள்ளி போன்ற வடிவத்தில் காட்சியளிக்குமாம்... இதை உங்களால் நம்பமுடிகிறதா? ஆம் உண்மைதான். புள்ளி வடிவில் ஏரி இருக்குமா? இது சாத்தியமா? வாருங்கள் அதைப் பற்றிப் பார்க்கலாம். எங்கு அமைந்துள்ளது இந்த புள்ளி ஏரி? 😮 புள்ளி ஏரி கனடா நாட்டில் கொலம்பியாவில் அமைந்துள்ளது. இதனை 'ஸ்பாட்டட் லேக்" என்றும் அழைப்பார்கள். மருத்துவக் குணம் கொண்ட ஏரியாகவும் புள்ளி ஏரி திகழ்கிறது. 😮 அங்குள்ள மக்கள் இந்த ஏரியை புனிதமாக கருதி மதிக்கின்றனர். இந்த ஏரியின் சிறப்பு அம்சங்கள் என்னவென்